நீராட்டி சீராட்டி
நிலாக்காட்டி சோறூட்டி
தோள்மேலே தொட்டில் கட்டி
தாலாட்டு தான்பாடி
தன்மடியில் தூங்க வைத்து
கண்ணை இமை காப்பதுபோல்
தன் பொன்னைக் காத்து வரும்
தாயன்பிற்கு ஈடேது தரணியிலே?
நிலாக்காட்டி சோறூட்டி
தோள்மேலே தொட்டில் கட்டி
தாலாட்டு தான்பாடி
தன்மடியில் தூங்க வைத்து
கண்ணை இமை காப்பதுபோல்
தன் பொன்னைக் காத்து வரும்
தாயன்பிற்கு ஈடேது தரணியிலே?
கொஞ்சிக் குலாவிப் பின்
பிஞ்சின் காலை கண்ணிலொற்றி
கொஞ்சுமொழி தான்பேசி
பிஞ்சின்மொழி தான் கேட்டு - அதை
ஊர்முழுதும் சொல்லிவரும்
தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
பிஞ்சின் காலை கண்ணிலொற்றி
கொஞ்சுமொழி தான்பேசி
பிஞ்சின்மொழி தான் கேட்டு - அதை
ஊர்முழுதும் சொல்லிவரும்
தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
நெஞ்சோடு தன் பிஞ்சை
நெருக்கமாய் அணைத்துத் தன்
குஞ்சைக் காக்கும் கோழி போல
பாசத்தோடு காத்துவரும்
தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
நெருக்கமாய் அணைத்துத் தன்
குஞ்சைக் காக்கும் கோழி போல
பாசத்தோடு காத்துவரும்
தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
ஆளான பின்னாளும்
அவன் தனக்கு குழந்தையென
அறுசுவையும் செய்துவைத்து
அன்போடு ஊட்டிவிடும்
அன்னைக்கு நிகருண்டா தரணியிலே?
அவன் தனக்கு குழந்தையென
அறுசுவையும் செய்துவைத்து
அன்போடு ஊட்டிவிடும்
அன்னைக்கு நிகருண்டா தரணியிலே?
கண்கண்ட தெய்வமவள்
காத்திடணும் கடைசிவரை
மன்வந்த தெய்வமல்லோ
மறக்கலாகா இறுதிவரை!!!
காத்திடணும் கடைசிவரை
மன்வந்த தெய்வமல்லோ
மறக்கலாகா இறுதிவரை!!!
No comments:
Post a Comment